இக்கணம் போலவோர் பொற்கணம் வாழ்வெலாம் றெக்கை கொண்டாடிடும் கலாபமாய்த் தோன்றிட திக்கெலாம் ஒலித்திடும் அவன்பறை ஓங்கிட அக்கணங்கள் சேர்ந்து நான்மறைகளெங்கும் ஓதிட சிக்கனங்களன்றி அருள் சொக்கணும் பேரருவியாய் சொக்கனும் தேவியோடு நிற்கணும் மனத்தினுள் தெற்கிலும் மேற்கிலும் கீழ்வடக்கு திக்கு யாவுமே நற்குணங்கள் தங்க ஓம் நமச்சிவாய வாழ்கவே!